புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2022

6 கடற்படையினருடன் படகு மாயம்!

www.pungudutivuswiss.com


ஆறு கடற்படையினருடன் படகொன்று காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட படகில்  இருந்தவர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  குறிப்பிட்ட கப்பலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு கடற்படையினருடன் படகொன்று காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட படகில் இருந்தவர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட கப்பலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையே கடற்படையினர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை போதைப்பொருள் கடத்தப்படுவதை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே காணாமல்போயுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை காணாமல்போவதற்கு முன்னர் குறிப்பிட்ட கடற்படையினர் தாங்கள் சந்தேகத்திற்கு இடமான படகொன்றை சோதனையிட முயல்வதாக கொழும்பிற்கு தெரிவித்தனர்.

காணாமல்போன படகு கடற்படையின் புலனாய்வுபிரிவினருக்கு சொந்தமானது தென்பகுதி கடலில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நான்கு நாட்களுக்கு முன்னர் கடற்படையினர் காணாமல்போயுள்ளனர்.

ad

ad