கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையே கடற்படையினர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை போதைப்பொருள் கடத்தப்படுவதை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே காணாமல்போயுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை காணாமல்போவதற்கு முன்னர் குறிப்பிட்ட கடற்படையினர் தாங்கள் சந்தேகத்திற்கு இடமான படகொன்றை சோதனையிட முயல்வதாக கொழும்பிற்கு தெரிவித்தனர். காணாமல்போன படகு கடற்படையின் புலனாய்வுபிரிவினருக்கு சொந்தமானது தென்பகுதி கடலில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு நாட்களுக்கு முன்னர் கடற்படையினர் காணாமல்போயுள்ளனர். |