புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2022

மார்க்கம் விபத்தில் தமிழ் இளையோர் இருவர் பலி

www.pungudutivuswiss.com

கனடாவின் ரொறன்ரோ மார்க்கம் நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் ரொறன்ரோ மார்க்கம் நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர்

உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரியும் சகோதரனும் என தெரியவந்துள்ளது.

ரொறன்ரோ மார்க்கம் வீதியில் நேற்றுமுன்தினம் பிற்பகலில் மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதி சந்திப்புக்கு அண்மையில் கனரக வானம் ஒன்று குறித்த இளையோர் பயணித்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் யாழ்பாணத்தின் சுதுமலையை பூர்வீகமாக கொண்ட புவன் பூபாலசிங்கம் தம்பதிகளின் இரு பிள்ளைகளான நிலா, பாரி ஆகிய இருவரும் மரணம் அடைந்தார்கள்.

ad

ad