ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நல்லூர் பிரதேச சபை வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது. இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஒற்றுமை என்கின்ற தளத்தின் மீது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வெளியே நிற்கின்ற கட்சிகளால் ஒன்றிணைய முடியவில்லை என்றால் அவர்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் ந.சிறிகாந்தா குறிப்பிடுகின்றார். அத்துடன் சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் எடுபிடிகள் இன்று களமிறக்கப்பட்டுள்ள பல்வேறு அரசியல் எடுபிடிகளுக்கு இந்த சுதந்திர தமிழ் மண்ணிலே இடம் இல்லை என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |