-

22 அக்., 2025

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரிடம் 5 மணிநேரம் விசாரணை! [Wednesday 2025-10-22 18:00]

www.pungudutivuswiss.com


கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.

  

மட்டக்களப்பைச் சேர்ந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வீட்டிற்கு கடந்த 18ஆம் திகதி சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர், முகநூலில் கட்சியின் தலைவர், விடுதலைப் புலிகளின் தலைவர் ஆகிய இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதாகவும் அது தொடர்பான விசாரணைக்கு கொழும்புக்கு வருமாறும் கடிதத்தை வழங்கினர்.

இந்நிலையில் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணியகத்துக்கு இன்று காலை சென்ற அவரிடம் சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை இடம்பெற்றதாகவும் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து மாலை 3 மணியளவில் வெளியேறியுள்ளதாக தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்

ad

ad