-

5 நவ., 2025

சுன்னாகத்தில் வன்முறைக் குழு அட்டகாசம்!- முச்சக்கர வண்டி, வீட்டிற்கு தீவைப்பு. [Wednesday 2025-11-05 06:00]

www.pungudutivuswiss.com


சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வன்முறை குழுவொன்று  திங்கட்கிழமை அட்டகாசம் செய்ததால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வன்முறை குழுவொன்று திங்கட்கிழமை அட்டகாசம் செய்ததால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது

குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்தவன்முறைக்குழு அங்கு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது தீ வைத்துள்ளது. இதனால் முச்சக்கர வண்டியானது முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

மேலும் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதுடன், வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில் விழிப்படைந்த வீட்டார் தீயை அணைத்ததால் மேலும் சேதங்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad