குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்தவன்முறைக்குழு அங்கு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது தீ வைத்துள்ளது. இதனால் முச்சக்கர வண்டியானது முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதுடன், வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில் விழிப்படைந்த வீட்டார் தீயை அணைத்ததால் மேலும் சேதங்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |