![]() தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
-
23 ஆக., 2024
நாங்கள் கூறுபவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்! - என்கிறார் சுமந்திரன்.
கட்சி என்ன முடிவெடுத்தாலும் அரியநேத்திரனுக்கே எனது ஆதரவு! - சிறீதரன் உறுதி
![]() எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார். |
உள்ளூராட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு.
![]() நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் 2023 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முடிந்தளவு விரைவில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறும் இன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது |
20 ஆக., 2024
இன்னொரு வேட்பாளரை வெற்றிபெற வைக்கவே பொது வேட்பாளராம்!
![]() தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார் |
இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை எனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று கோடிக்கணக்கான சொத்தினை கொண்டுள்ளார். அவருக்கு அந்த சொத்து எவ்வாறு வந்தது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அந்த வகையில் அனுரகுமார திஸாநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ குறிப்பிடக் கூடிய மூவராவர். அத்தோடு நாமல் ராஜபக்சவும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் தெற்கிலேயுள்ள வாக்குகள் சிதறிச் சின்னா பின்னமாகக் கூடிய நிலை உருவாகலாம். அந்த வகையில் தமிழ் மக்களுடைய வாக்குகளுக்குக் கூடிய பெறுமதி காணப்படும். அதில் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய அதிகூடிய வாக்குகள் இருக்கிறது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சிந்தித்து தமது பெறுமதியான வாக்கினை அளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள். இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத் தமிழரசுக் கட்சியினராகிய நாம் நேற்று முன்தினம் எமது மாவட்ட, தொகுதி மற்றும் பிரதேச மட்ட மகளீர், வாலிபர் அணி உறுப்பினர்களை அழைத்து அவர்களது கருத்துக்களை உள்வாங்கியிருந்தோம். அந்தவகையில் நாம் அனைவரது தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்தே முடிவை எடுக்க வேண்டுமென்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். அத்தோடு மாவட்டக் குழுவின் தீர்மானத்தை மத்திய குழுவுக்குச் சமர்ப்பிப்போம். வவுனியாக் கூட்டத்தில் கலந்து கொண்ட 33 உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர மற்றைய உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தேவையற்றதொன்று என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இவ்வாறான நிலையில் கட்சி உறுப்பினர்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கும் வகையில் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலை உருவாகலாம். நாம் கட்சி ரீதியாக பொது வேட்பாளருக்கு ஆதரிப்பதாக எதுவித கருத்தும் இதுவரை வெளியிடவில்லை. அவர் தனது விருப்பத்திற்கிணங்க சில கட்சிகளின் ஆதரவுடனே முன்னெடுக்கப்பட்ட விடயமாகும். அத்தோடு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை தானே முதலில் குருக்கள் மடத்தில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டில் வெளிப்படுத்தியதாகவும் ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை. இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்க தனக்கெதிராக நாமல் ராஜபக்ச களம் இறங்குவார் என எதிர்பார்க்கவில்லை. அவரின் நினைப்பில் ஜனாதிபதி தேர்தல் வரும்போது மொட்டுக்கட்சி தமக்கு ஆதரவளிக்குமென்ற உணர்வே காணப்பட்டது. தமிழ்ப் பற்றாளர்கள் ராஜபக்ச தரப்பினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெரியும். அதனால்தான் வாக்கைப் பிரிக்கும் செயற்பாடாகத்தான் இருக்கும் என ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன். இந்தப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதியாக இருக்கிறார். ஏனெனில் அவருக்கான அடையாளம் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர். இது தமிழ் மக்களை அடகு வைக்கும் செயற்பாடாகும். இவ்வாறான காலகட்டத்தில் எமது இளைஞர்களின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு பதில் கூற வேண்டிய தேவையுள்ளது. இது நாம் எடுத்த தீர்மானமல்ல.இஸ்லாமிய சகோதர்களில் சிலர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ பக்கமும் இருக்கின்றனர். எனவே மாவட்ட தமிழ் மக்கள் எமது கட்சியின் முடிவின்படி செயற்பட வேண்டுமென்றார் |
19 ஆக., 2024
சுமந்திரன் ஒருபுறம் கஜேந்திரன் மறுபுறம் எதிர்பிரச்சாரங்கள் மத்தியிலும் திரண்ட மக்கள்!
அரியநேத்திரனுக்கு தடை - சிங்கள வேட்பாளர்கள் பக்கம் சாய்கிறது தமிழரசு
![]() பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் அவர்களுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை எனத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
18 ஆக., 2024
மொட்டை அழித்து விட்டார் ரணில்!
![]() ராஜபக்ச குடும்பத்தின் மீதுள்ள ஊழல், மோசடிக் குற்றங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேதான் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன கட்சியையும் நாசமாக்கி விட்டார். பொதுஜன பெரமுன கட்சியைத் தற்பொழுது காப்பாற்றிக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ தன் மகனை ஜனாதிபதிப் போட்டியில் களமிறக்கியுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியைப் பாதுகாப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். |
தந்தை செல்வாவுக்கு அஞ்சலி செலுத்திய பின் பிரசாரத்தை தொடங்கினார் அரியநேத்திரன்
![]() தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் இன்றையதினம் தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். |
|
17 ஆக., 2024
34 கட்சிகளின் பிரமுகர்களுடன் ரணில் உடன்படிக்கை
![]() 34 அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இன்று முற்பகல் 10.06 சுப நேரத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டார். |
15 ஆக., 2024
எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ரணில்!
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார் |
சங்கு சின்னத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்!
![]() ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுகின்ற பா.அரியநேத்திரனுக்கு 'சங்கு' சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. |
கை கொடுத்தார் ரணில் - கும்பிட்டார் சஜித்!
![]() தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பகல் 11 மணியுடன் நிறைவடைந்தது |
14 ஆக., 2024
திருடனின் முகமூடி கழன்றது - சிசிடிவியில் சிக்கினான்!
![]() யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான CCTV காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர் |
சஜித்துடன் 27 கட்சிகள் உடன்படிக்கை!
![]() எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக 27 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர் |
36 வேட்பாளர்கள் கட்டுப்பணம்!
![]() ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது |
9 ஆக., 2024
கொக்குத்தொடுவாய் புதைகுழி- இலக்கத்தகடுகளை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை
![]() முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படுள்ளது |