புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2015

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் 1900 பேர் சுட்டுப் படுகொலை


சிரியாவில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 6 மாதத்தில் தங்களிடம் பிடிபட்ட ஆயிரத்து 878 பேரை சுட்டுக் கொன்று மரண தண்டனையை நிறை வேற்றியுள்ளனர்.

இதில் பெரும்பாலானவர்கள் பொது மக்கள் என பிரிட்டனைச் சேர்ந்த சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய சட்டப்படி அரசு அமைக்கும் நோக்கத்துடன் ஐ.எஸ். ஐ.எஸ்.; தீவிரவாத அமைப்பு சிரியா வில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வருகிறது.

ஈராக் மற்றும் சிரியாவில் பெரும்பகுதியை இந்த அமை ப்பு கைப்பற்றியுள்ளது. தனது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில் கிலாபத் சட்டத்தை கடந்த ஜூன் மாதம் முதல் அமுல்படுத்தியுள்ளது இந்த அமைப்பு.

ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிரியா, ஈராக் இராணுவத்தினர் மற்றும் குர்திஸ் படையினருடன் போரிட்டு வருகின்றனர்.

பிற நாடுகளின் படையும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிர வாதிகளுக்கு எதிராகக் களமிறங்கி யுள்ளன.

சிரியா மனிதவுரிமை கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்துல் ரகுமான் இது தொடர்பாகக் கூறியதாவது, கடந்த 6 மாதங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்.; தீவிரவாத அமைப்பினர், ஆயிரத்து 175 பொதுமக்களைக் கொலை செய்துள்ளனர்.

இதில், 8 பெண்களும், 4 குழந்தைகளும் அடங்குவர். கொல்லப்பட்டவர்களில் 930 பேர் சன்னி முஸ்லிம்கள். வெளிநாடுகளைச் சேர்ந்த 116 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து போரிட்டனர்.

பின்னர் அவர்கள் நாடு திரும்ப நினைத்த போது அவர ;களை இயக்கத்தினர் கொன்றுவிட்டனர். அதே இயக்கத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் வேறு குற்றச்சாட் டுகளின் பேரில் கொல்ல ப்பட்டனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்.; தீவிரவாத அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இஸ்ஸாமிய சட்டத்தை மீறியவர்களுக்கு, பொது இடத்தில் தலையைத் துண்டித்துக் கொலை செய்தல், கல்லால் அடித்துக் கொலை செய்தல் போன்ற தண்டனைகளை ஏராளமானவர்களுக்கு வழங்கியுள்ளது

.

ad

ad