புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2015

கட்டாய மதம் மாற்றலை நிறுத்தக்கோரி பாப்பரசருக்கு மகஜர் .

news


















கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதை நிறுத்துமாறு கோரி பாப்பரசர் பிரன்ஸிசிடம் மகஜரொன்றைக் கையளிப்பதற்காக கையெழுத்து
திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சைவத்தமிழ் இந்து சிவில் சமூகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ள பாப்பரசர் பிரன்ஸிசிடம் கையளிக்கும் வகையில் இந்த மகஜரில் கையெழுத்து பெறப்படுகிறது.                         
 திருவெம்பாவை காலத்தில் வடக்கு, கிழக்கின் பல இந்து ஆலயங்களிலும் மற்றும் கிராம ரீதியாகவும் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் பன்னெடுங்காலமாக பூர்வீகமாக தமக்கே உரித்தான சுதேச கலாச்சார பண்பாட்டு விழுமியங்களுடன் சைவத்தமிழ் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இந்த நாட்டில் காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஏனைய மதப் பிரிவுகளுடன் மத நல்லிணக்கத்தை பேணிவருவதோடுஇ தமது சுதேசப்பண்பாட்டை ஆழமாக பின்பற்றியும் வருகின்றனர்.
இந்நிலையில் குறிப்பாக இலங்கையின் வடக்கு - கிழக்கில் கடந்த மூன்று தசாப்த யுத்தத்தாலும் அதன் பின்னரான விளைவுகளாலும் சுதேசிகள் மிகப்பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அவல நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு வெளி உதவிகளில் தங்கிவாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்களில் பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இவர்களுக்கு பல சமய, சமூக அமைப்புக்கள் பல்வேறு வழிகளில் கைகொடுத்து வருகின்றன. இருந்த போதிலும் கணிசமான கிறிஸ்தவ போதகர்களும், அமைப்புக்களும் கல்விஇ, மருத்துவ, பொருளாதார உதவிகளை மதமாற்றத்துக்குரிய ஆயுதமாக பயன்படுத்தி வருவது கவலைதரும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
எனவே உலக கிறிஸ்தவ ஆன்மீகத் தலைவர் என்ற ரீதியில் மேலைத்தேயத்தில் முஸ்லிம் மக்களை மதம் மாற்றாது கிறிஸ்தவ - முஸ்லிம் ஒற்றுமைக்கு தாங்கள் பாடுபடுவது போன்று, இங்கும் சுதேசிகளானஇந்துகளின் ஆதங்கங்களை புரிந்துகொண்டு, தங்கள் திருச்சபைகளுக்கும் ஏனைய கிறிஸ்தவ அமைப்புக்களுக்கும் பொருளாதார உதவிகளை மதம் மாற்றுவதற்கான ஓர் நிர்ப்பந்தமாக பயன்படுத்த வேண்டாம் என்பதையும், மதநல்லிணக்கத்துக்கு இடையூறுவிளைவிக்கும் வகையில் தேவையற்ற இடங்களில் மதச்சின்னங்களை நிறுவவேண்டாம் எனவும் அறிவுறுத்துமாறு சகோதரத்துவத்துடனும் ஆன்மீக உணர்வுடன் தங்களை வேண்டுகின்றோம். 




ad

ad