புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2019

இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்­துக்கு உத­வு­வ­தற்கு பணச்­ச­லவை செய்யும் உயர் கல்வி நிறு­வனம்

இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்­திற்கு உதவும் நோக்கில் கறுப்புப் பணத்தை சட்­ட­பூர்வ பாவ­னைக்கு உகந்த பண­மாக
மாற்­றுதல் மற்றும் இஸ்லாமிய அடிப்­ப­டை­வா­தத்தைப் போஷிக் கும் இடமாக தெஹி­வ­ளையில் உள்ள தனியார் உயர் கல்வி நிறு­வனம்   காணப்­ப­டு­கின்­றது.
ganasara_thero.jpg
அந்தக் கல்வி நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ளரை உட­ன­டி­யாகக் கைது செய்ய வேண்டும்.பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில்  உடனடியாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். 
அவ்­வாறு நடவடிக்கை எடுக்­கா­விடின் எம்­மு­டைய உயி­ருக்கும் அச்­சு­றுத்தல் ஏற்­படும் என்று பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரிவித்துள்ளார். 
ஞான­சார தேரர்  விடு­விக்­கப்­பட்ட  பின்னர் முதற்­த­ட­வை­யாக நேற்றைய தினம் கொழும்பில் ஏற்­பாடு செய்த  செய்­தி­யாளர் சந்திப்­பி­லேயே  இவ்­வாறு குறிப்­பிட்டார். 
அங்கு அவர் தொடர்ந்தும் கூறி­ய­தா­வது : 
சவுதி அரே­பி­யாவின் புல­னாய்வுப் பிரிவு முக­வர்கள் இலங்­கையில் வஹா­பி­ஸத்தை விதைக்கும் நோக்கில் பிரத்­தி­யேக செயற்திட்டங்களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். 
அதிலே ஒரு தலை­வரை உரு­வாக்க மாட்டோம்.பல தலை­வர்­களை உரு­வாக்­குவோம் என்று குறிப்­பி­டு­கின்­றார்கள். அதன்­படி வஹாபிஸம் சார்ந்த 50 அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அது இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் ஒரு பிரிவு எனும் அதேவேளை இதில் கல்வி நட­வ­டிக்­கைகள் சார்ந்த நிறுவனங்களும் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளன. 
தெஹி­வ­ளையில் தலைமைக் காரி­யா­ல­யத்தை  மேற்­கு­றித்த தனியார் உயர்  கல்வி நிறு­வ­னத்தில் கல்வி பயின்ற சுமார் 200 முஸ்லிம் இளை­ஞர்கள் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளுடன் இணைந்து பணி­யாற்­று­வ­தற்­காக பிரித்­தா­னி­யா­விற்கு அனுப்பப்பட்­டி­ருக்­கின்­றார்கள். 
இவ்­வாறு வஹா­பிஸம் போதிக்­கப்­பட்ட அடிப்­ப­டை­வா­திகள் 3000 பேர்­வ­ரையில் நாட்டில் உள்­ளனர்.ஒரு சிறு குறுந்­த­க­வலின் மூலம் இந்த 3000 பேரையும்  விரை­வாக ஓரி­டத்தில் திரட்ட முடியும். 
இவை­ய­னைத்­தையும் எனக்குக் கிடைக்­கப்­பெற்ற நம்­ப­கத்­தன்மை வாய்ந்த தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே குறிப்­பி­டு­கின்றேன்.
வஹா­பிஸம் என்­பது பாகிஸ்­தா­னிலும்,ஆப்­கா­னிஸ்­தா­னிலும்  மத்திய கிழக்கு நாடு­க­ளிலும் போதிக்­கப்­ப­டு­வ­தா­கவும்  வலுவூட்டப்­ப­டு­வ­தா­கவும் நாங்கள் கரு­திக்­கொண்­டி­ருக்­கிறோம். ஆனால் தற்­போது அவுஸ்­தி­ரே­லியா  ஐக்­கிய இராச்­சியம் போன்ற நாடு­க­ளி­லேயே இந்த அடிப்­ப­டை­வாதப் போத­னைகள்  பயிற்­சிகள் நடை­பெ­று­கின்­றன.
 இந்­நி­லையில் கிழக்­கிலே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதப் பிரசாரங்­களை முன்­னெ­டுத்த   குறித்த கல்வி  நிறுவன உரிமையாளர் வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்வதற்கு முன்னர் இன்றைய தினத்திற்குள் கைது செய்ய வேண்டும். அதேபோன்று அவரால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சியையும் தடை  செய்ய வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்டுக்கொள்கின்றோம்

ad

ad