புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2012


ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக உலகளாவிய காலக்கிரம மீளாய்வு ஆரம்பம்: இலங்கைக்கு ஆதரவாக 90 நாடுகள்
இலங்கை தொடர்பான உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அறிக்கை எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு மனித உரிமைகள் சபை தயாராவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அறிக்கை தொடர்பான கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்த கூட்டத் தொடர் நான்கு தினங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சர் செயலாளர் கருணாதிலக அமுனுகம கூறினார்.
இதன்பொருட்டு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அமர்வுகளில் பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் - வெளிவிவகார அமைச்சு
உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அமர்வுகளில் பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என வெளிவிகார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
காலக்கிரம அமர்வுகளில் 99 நாடுகள் இலங்கை விடயம் குறித்து பேச உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதில் 90 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே குரல் கொடுக்கும். காலக்கிரம அமர்வுகளில் பங்கேற்கும் இலங்கை சுயமாக எந்தவொரு வாக்குறுதிகளையும் அளிக்கப் போவதில்லை.
வாக்குறுதி அளித்தால் எதிர்வரும் காலங்களில் அது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்படலாம் என கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

ad

ad