புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2013


‘வனயுத்தம்’ வழக்கு: முத்துலட்சுமிக்கு
25 லட்சம் நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு


சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை “வனயுத்தம்” என்ற பெயரில் தமிழ், கன்னடத்தில் சினிமா படமாகி யுள்ளது. வீரப்பன் வேடத்தில் கிஷோர் நடித்துள்ளார். போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜுனும், வீரப்பன் மனைவி
முத்துலட்சுமி வேடத்தில் விஜயலட்சுமியும் நடித்துள்ளனர். ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ளார். 

இப்படத்தை எதிர்த்து முத்துலட்சுமி ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். முத்து லட்சுமிக்கு படத்தை திரையிட்டு காட்டும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. படத்தை பார்த்த அவர் ஆட்சேபனைக்குரிய காட்சிகளை பட்

டியலிட்டு அவற்றை நீக்கவேண்டும் என்றார். கோர்ட்டும் சர்ச்சைக்குரிய சீன்களை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டது.
 
இந்நிலையில், முத்துலட்சுமி ‘வனயுத்தம்’ படத்தில் ஆட்சேப னைக்குரிய காட்சிகளை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார். மேலும், படத்தின் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘உண்மை கதை’ என்ற வாசகத்தையும் நீக்கவும் அவர் ஒப்புக்கொண்டார். 
இதையடுத்து, முத்துலட்சுமி வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.

ad

ad