புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2013


அரசியல் கைதிகளையும் ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் : மனோ

 
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விடுதலை செய்ததைப் போன்று அரசியல் கைதிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை செய்யவேண்டுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் அனைத்து இனங்களுக்கும் சமவுரிமைகள், சம அந்தஸ்த்து என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டும். எனவே தான் தமிழர்களின் உள்ளங்களை வெற்றிகொள்ள முடியுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கொழும்பு - 07 இல் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ad

ad