நத்தம் விஸ்வநாதன் வழக்கு : கலைஞருக்கு சம்மன்
தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனைப் பற்றி முரசொலியில் அவதூறுச் செய்தி வெளியிட்டதாக சென்னை மாநகர அரசு வழக்க
றிஞர் ஜெகன் சென்னை மாவட்ட முதன் மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி பொன்.கலையரசன் முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது அவர், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக முரசொலி ஆசிரியர் செல்வம், தி.மு.க. தலைவர் கலைஞர் ஆகியோர் ஏப்ரல் 29-ம்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இது தொடர்பாக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.