Sterlite Closure - அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்..............சபாஷ வைகோ - Content Suitable for ALL - Info General Category
இது தமிழ் நாட்டுக்கு சமீபத்தில் கிடைத்த நான்காவது வெற்றியானாலும் இதன் மூலக்காரணம் வைகோக்குத்தான். இந்தியாவின் இன்னுமொரு நடமாடும் யூனியன் கார்பைடாய் அடிக்கடி விஷவாயுவை கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட முதன் முதலாய் தூத்துகுடி மக்களுடன் கை கோர்த்தவர் தான் இந்த வைகோ. இவரின் பல முயற்ச்சி கேள்வி குறியாய் இருந்த போதிலும் இந்த மக்களின் வாழ்க்கையை செம்மைபடுத்துவதற்க்காக இவர் எடுத்த முயற்ச்சி இன்று மாவட்ட ஆனையாளரின் ஆனைப்படி இந்த ஆலைக்கு மூடுவிழா நடந்தது. இதற்க்கு இன்னுமொரு மூலக்காரணம் ஜி ராமப்பிரியா என்ற வக்கீலும் தான். 2010 ஆம் ஆண்டு சென்னை ஹைகோர்ட் இதை மூட உத்தரவு இட்டும் மேல் முறையிடு சால்ஜாப்பால் இந்த ஆலை செயல்பட்டாளும் மக்களின் போராட்டம் ஒவ்வொரு நாளும் கதவுக்கு வெளியே ஒலித்து கொண்டே இருந்தது.
ஒரு முறை சென்னையில் இருந்து டெல்லி மார்க்கமாய் செல்லும் விமானத்தில் வை கோ அம்ர்ந்திருந்தார். விமானம் புறப்பட தயார் ஆன நேரம் அவருக்கு அருகில் ஒரு தொழிலதிபர் வந்து அமர்ந்தார், அவர் தான் இந்த ஸ்டெர்லைட் முதலாளி அகர்வால்.வைகோ நிலமையை புரிந்து கொண்டு வேறு இருக்கைக்கு மாற்றுமாறு கூறின போதிலும் இது ஒரு ஆர்கனைஸ்ட் ஐஸ்பிரேக்கிங் செஷன் என்று விமான கம்பெனிக்கு தெரிந்திருந்தும், சீட்டை மாற்ற மறுத்தனர். கொஞ்சமும் தாமதிக்காமல் விமானத்தை விட்டு இறங்கி வேறு ஒரு விமானத்தில் டெல்லி சென்றடைந்தார். இது தான் அவரின் அப்பளுக்கற்ற அரசியல் தன்மைக்கு ஒரு எடுத்து காட்டு இந்த ஸ்டெர்லிங் இன்டஸ்ட்ரிஸ்ன் மூடு விழாவுக்கு காரணம்.