புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2013




தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம்: ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு! சிங்கள தேசத்திற்கு பேரிடி
தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.
2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக  கருதப்படுவதோடு. ஆயிரக்கணக்கான தமிழீழத் தாயக மக்கள் தங்கள் கருத்துக்களை இச்சாசன உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளமை உணர்வெழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் முரசறைவு அமைந்திருந்த சமவேளை கனடா, பிரித்தானியா, பிரான்சு என பல்வேறு இடங்களில் ஒன்றுகூடிய தமிழீழ உணர்வாளர்கள் முரசறைவின் போது உணர்வெழுச்சியோடு கூட்டிணைந்து நின்றனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (தமிழகம்)பிரதிநிதி பேராசிரியர் சரசுவதி அவர்கள் முரசறைவின் முன்னுரை வழங்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வரலாற்று ஆவணமாகிய தமிழீழ சுதந்திர சாசனத்தினை வாசித்து முரசறைந்தார்.
முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனமானது நிகழ்வுபூர்வமான தமிழீழ தேசத்தின் நிலைப்பாடுகள் முதலில் விபரித்திருந்தோடு வெளியுறவு, பொருண்மியம், மொழி, கல்வி, மருத்துவம் - உடல்நலன்சார், மேம்பாடு, சுற்றுபுறச்சூழல், குடியுரிமை ஆகியனவற்றின் தமிழீழ தேசத்தின் கொள்கை நிலைப்பாட்டினை உள்ளடக்கியிருந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்சநிகழ்வாக அமைந்திருந்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு நிகழ்வில் தென்சூடானிய விடுதலை இயக்கத்தின் பிரதிநிதி Daniel Mayan, வங்கதேச விடுதலை இயக்க பிரதிநிதி Dr.Nabibulla, அமெரிக்காவின் முன்னாள் சட்டாஅதிபர் (நா.தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்) Ramsay Clarke, பேராசிரியர் Francis Boyle, நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் தணிகாசலம் தயாபரன்ஆகியோர் உரைகளை வழங்கியிருந்தனர்.
தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு கடந்த 15ம் நாள் முதல் இடம்பெற்றிருந்த முரசறைவு மாநாட்டில் தமிழர்கள் மற்றும் தமிழரல்லாத பல்வேறு துறைசார் ஆளுமையாளர்கள் பலர் பங்கெடுத்திருந்ததோடு 20க்கும் மேற்பட்ட ஆய்வுகள் சமர்பிக்கப்பட்டிருந்தன. பல்வேறு தலைப்புக்களில் விவாதங்களும் கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றிருந்தன.

ad

ad