புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2013


யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையால் செம்மணியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடமாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா
நாடா வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
ஏ 9 வீதி அகலிப்புப் பணிகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றப்பட்ட செம்மணியில் உள்ள இந்த யாழ்ப்பாணம் வரவேற்பு பெயர்ப்பலகை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், ஈ.சரணவபவன், தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பி.வசந்தகுமார், மற்றும் பிரதேச சபைகளினுடைய தவிசாளர்கள் உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

ad

ad