ஸ்ரீசாந் உடன் அந்தரங்கத்தை பகிர்ந்து கொண்ட அந்த நடிகை யார்?
IPL போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை டெல்லி போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
ஸ்ரீசாந்த்தை கைது செய்தபோது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அவருடன் 2 மாடல் அழகிகளும், மராத்திய நடிகை ஒருவரும் இருந்துள்ளனர்.
போலீசார் அந்த மராத்திய நடிகையிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அந்த நடிகை யார் என்ற விவரத்தை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
சூதாட்டக் கும்பல் இந்த நடிகையை பயன்படுத்தி ஸ்ரீசாந்திடம் வேலை வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீசாந்த் அறையில் இருந்து அவரது லேப்டாப், டேட்டா கார்டு, ஐபேட், டைரிகள் மற்றும் செல்போன் ஆகியற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீசாந்த் மீது மும்பை போலீசாரும் வழக்குப் பதிவு செய்யக்கூடும் என்று தெரிகிறது.