புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2013

கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’ இந்திய தேர்தலில் குற்றப்பின்னணி உடையவர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
 சட்டம் இன்னும் நிறைவேற்றவில்லை. இதனால் பழைய சட்டப்படி தேர்தல் நடப்பதால் கனிமொழி போட்டியிட தடை இல்லை. தமிழகத்தில் இந்த தேர்தலுக்கு வேறு மாநில அதிகாரியை பார்வையாளராக நியமிக்க தேவையில்லை. 
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அரசியல் கட்சிகளையும் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது’’என்று தெரிவித்தார்.

ad

ad