பாடசாலை ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனுக்கு பேஸ்புக் மூலம் ஆபாசமான படங்களை அனுப்பி பாலியல் உறவுகொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் மிகப் பிரசித்தமான பிட்ஸலன் உயர்தர பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 33 வயதான ஆசிரியையே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான அவர் பேஸ்புக் மூலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை மாணவருக்கு அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் தன்னோடு உறவுகொள்ளுமாறு அழைத்ததாக சம்பந்தப்பட்ட மாணவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக பேஸ்புக் மூலமான உறவு இருந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மாணவருடன் தவறான உறவினை வைத்துக்கொண்ட ஆசிரியையை பாடசாலை நிர்வாகம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.