புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

தடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைப்பு
அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தினால் பதினாறு அரச சார்பற்ற நிறுவனங்கள் தடை செய்யப்பட்டிருந்தது.
குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்வதற்காக 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 100 பேர் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருபது பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல வருடங்களாக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக இவ்வாறு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு பின்னர், நாட்டை விட்டுத் தப்பிச் சென்று மீண்டும் நாடு திரும்பிய பத்து பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்னதாக மறைத்து வைத்திருந்த வெடிபொருட்களையும் பாதுகாப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் சில தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களுக்கு பணத்தை அனுப்பி அவர்களின் ஊடாக பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒரு சிங்களவரின் கணக்கிற்கும் பணம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களைத் தவிர்ந்த வேறு சில புலி ஆதரவு அமைப்புக்களை தடை செய்யும் நோக்கில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ad

ad