புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

சுவிஸ் பாஸல் மைதானத்தில் இன்று ஓர் விசேசமான ஆட்டம்.பாசெலின்  வெற்றியும்   சேர்ந்தது கூடுதல் பெருமை 


இன்றைய ஐரோப்பியலீக் காலிறுதி ஆட்டத்தில் பலம்  மிக்க ஸ்பெயின் நாடடு கழகமான வலேன்சியாவுடன் மோதிய பாஸல் 3/௦ என்ற உயரிய வெற்றியை பெற்றது .இன்றைய  ஆட்டத்தில் ஒரு முக்கிய குறிப்பிடத்தக்க
விசேசமானா அபூர்வமான நிகழ்வு பார்வையாளர்கள் இல்லாமலே பாஸல்  வெற்றி பெற்ற பெருமை. கடந்த போட்டியில் ஒஷ்திரிய நாடடுக் கழகமான சால்ஷ்பெர்குடன் நடந்த போட்டியில் பாஷேல் கழகத்தின் ஆதரவு பார்வையாளர்கள் ஒரு சில விசேச பொருட்களை தீமூட்டி புகை மண்டலமாக்கி சுமார் 20 நிமிடங்கள் ஆட்டத்தை நடக்க விடாமல் இடையூறு பண்ணியமைக்காக இன்றைய  ஆட்டத்துக்கு பார்வையாளர்களை அனுமதிக்காத தண்டனை வழங்கப்பட்ட நிலையில் பாசலின் இந்த வெற்றி முக்கியமானது.மீள் போட்டியில் வலன்சிய அணி 4_ ​0 என்ற உயரிய வெற்றியைப்  பெற வேண்டும் . அதிலும் பாஸல்  அவர்களின் மைதானந்தில் கோலினை போடுமானால் இந்த வெற்றி பெறுபேறு  இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் .ஆக  பாசலுக்கு இன்றைய  வெற்றி அரையிறுதி ஆட்டத்துக்கு நுழைவதற்கு கூடுதலான சாத்தியமான  வழியைக்  கொடுத்துள்ளது .இன்றைய ஆட்டத்தை காண அனுமதிக்கபட்ட விசேச உத்தியோக பூர்வ பார்வையாளர்களான 700  பேர் மட்டுமே உள்ளே இருந்தனர் .

ad

ad