புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2014

மாயமான மலேசிய விமானத்தின் புதிய சர்ச்சை! 
மலேசிய விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி பிலிப் வூட்டின் பெண் தோழிக்கு விமானம் மாயமான பின்னர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 
 
பயணியின் பெண் தோழி சாராவிற்கு விமானம் மாயமானதில் இருந்து பல வினோதமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அந்த அழைப்பில் 'அடுத்ததாக உன்னை கொல்ல போகிறோம்" என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
 
'எனக்கு விமானம் மாயமானதை அடுத்து 2 வாரங்கள் கழித்து எனது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் நான் அடுத்ததாக உன்னை கொல்ல போகிறேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது" என்று சாரா கூறியுள்ளார் என்று இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
சாரா தனக்கு சீனாவை மையமாக கொண்ட தொலை பேசியில் இருந்தே மர்ம அழைப்புகள் வந்ததாக கூறியுள்ளார். எப்.பி.ஐ எச்சரிக்கையை அடுத்து அந்த மர்ம அழைப்புகள் நின்றுள்ளன. 
 
ஒரே தொலைபேசி எண்ணில் இருந்தே அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் வந்துள்ளது. சாரா தற்போது பீஜிங்கில் உள்ளார். முன்னதாக அவர் தனது ஆண் நண்பர் பிலிப்புடன் வாழ பீஜிங்கில் இருந்து வெளியேற திட்டமிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எப்.பி.ஐ.விசாரிப்பதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
-

ad

ad