புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014


மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் முகங்கொடுத்த விமர்சனங்கள்: நவி.பிள்ளை
சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் தான் விமர்சனங்களை எதிர்கொண்டதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை அவர்கள் தெரிவித்திருந்த கருத்து சிறிலங்காவுக்கு சபையில் விழுந்த மற்றுமொரு கரும்புள்ளியென தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஐ.நா ஆணையாளர் அவர்களை கீழ்த்தரமாக விமர்சித்தும், ஆணையாளரது கருத்துக்களை சிறிலங்கா அரச தரப்பு கேள்விக்குட்படுத்திய சம்பவங்கள் கடந்த காலத்தில் வெளிவந்திருந்தன.
இந்நிலையில் தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் 26வது தொடரின் ஆரம்ப உரையில் இதனைத் தெரிவித்த ஆணையாளர் நவி பிள்ளை அவர்கள் சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் தான் முகங்கொடுத்த விமர்சனங்களை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள், நாடுகளின் குழப்ப நிலைக்கும் மோதல்களுக்கும் பிரதான காரணிகளில் ஒன்றாக உள்ளது. எனவே ஒவ்வொரு நாடுகளும் மனித உரிமையினை பாதுகாப்பதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தால் அதற்கு நன்மை உண்டாகும்.
இருப்பினும் எனது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கைகள் மற்றும் ஆய்வுகள் இழுத்தடிப்புகளாலும் மறுப்புக்களாலும் எதிர்கொள்ளப்பட்டன. இது நாம் அரசாங்கங்களை விமர்சித்ததால் உண்டானதா?
ஆம், இதுவே மனித உரிமைகளை பரப்புரை செய்வதன் இயல்பு. அதிகார வர்க்கத்தினரிடம் உண்மையை கூறுவது சிலருக்குள்ள சிறப்புரிமைகள் என்பன மனித கௌரவத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகும். சில அரசுகள் பேச விரும்பாத விடயங்களை நாம் கவனத்தில் எடுப்பது இதற்கு காரணமா?
ஒரு நாட்டில் இது கொடூரமான பயங்கரவாத எதிர்ப்பு உபாயமாக இருக்கலாம். இன்னொரு நாட்டில் இது சிறுபான்மையினர் அல்லது வந்தேறு குடிகளின் மீதான மனிதாபிமானமற்ற செயற்பாடாக இருக்கலாம்.
சில அரசுகள், ஓரின சேர்க்கையாளர்கள், இருபாலின, பால்மாறும் தன்மையினர், பெண்கள், தோலில் வெண்மை படர்வோர், சில சாதியினர, சில சமயத்தினர், இனத்தவர்கள் ஏனையோரைவிட குறைவான உரிமைகள் உள்ளவரென நினைக்கலாம்.
கடந்த ஆறு வருடங்களில் தனக்கு அறிவூட்டும் முழுமையான அனுபவங்கள் கிடைத்ததாக கூறிய அவர் மனித உரிமை பேரவை வழங்கிய வாய்ப்புகளுக்கு நன்றி.
ஒரு மாற்றத்துக்கு தான் உதவியதாகவும் பலமான ஒரு பரப்புரையாளராக இருந்ததுடன், பயம் அல்லது பாரபட்சமின்றி பேசிய ஒருவராக தான் செயற்பட்டதாக நம்புவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad