புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2014


பளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மோதியதில் 8 பேர் காயம்
வனவாசல ரயில் நிலையத்திற்கு அருகில் மரண ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது ரயில் மோதியதில் சுமார் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு, இன்று வியாழக்கிழமை  பிற்பகல் 1.25 மணியளவில் வனவாசல ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து மரண உர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மோதியுள்ளது.
இச்சம்பவத்தில்,ஒரு, வான் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணித்த ஐவரும் பாதசாரிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால், கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

ad

ad