நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 7 மாகாணங்களில் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வாரத்துக்குள் மட்டும் வெள்ளப் பெருக்கு, மண் சரிவு ஆகிய அனர்த்தங்களினாலேயே இந்த 12 பேரும் உயிரிழந்துள்ளதுடன் நேற்று மாலைவரை 6 இலட்சத்து 63 ஆயிரத்து 228 பேர்பாதிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் 3519 வீடுகள் முற்றாகவும் 11366 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வெள்ள அனர்த்தம் அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏற்பட்ட மரணங்கள் 8 உம் மண்சரிவால் ஏற்பட்ட மரணங்கள் மூன்றும் நேற்று மாலைவரை பதிவாகியிருந்தன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 35 மில்லியன் ரூபாவை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.ஹம்பாந்தோட்டை பீகொக் பீச் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் நிலை உள்ளது. மக்களை பாதுகாத்து மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்துக்கே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாகணத்தில் மட்டும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் மூன்று மரணங்களும் கண்டி மாவட்டத்தில் மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளன. கண்டி மாவ்வட்டத்தில் பதிவான மூன்று மரணங்களும் மண் சரிவினால் ஏற்பட்டதாகும்.
மலையகத்தின் மினிப்பே பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும் பேராதெனிய பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.
அத்துடன் அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வெள்ளம் கரணமாக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வவுனியா பிரதேசத்திலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது. அத்துடன் கண்டி மாவட்டத்தில் மன்சரிவில் சிக்கிய குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் காயமடிந்துள்ளனர்.
இதனை விட நேற்று மாலை ஆகும் போது பாதிக்கப்பட்டிருந்த 650635 பேரில் 22941 குடும்பங்களை சேர்ந்த 80736 பேர் 334 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உலர் உணவுகளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்கிவருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால் குமார குறிப்பிட்டார்.
இதனை விட நேற்று மாலை ஆகும் போது பாதிக்கப்பட்டிருந்த 650635 பேரில் 22941 குடும்பங்களை சேர்ந்த 80736 பேர் 334 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உலர் உணவுகளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்கிவருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால் குமார குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் தலை நகர் கொழும்பும் வடக்கின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி, முல்லை தீவு,மன்னார் மாவட்டங்களும், கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களும் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களும், வடமேல் மாகாணத்தின் குருணாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களும் மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களும் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலையிலும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் மண்சரிவு அச்சுறுத்தலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இந்த அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கிழக்கிற்கே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கிழக்கிற்கே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கிழக்கு நிலைவரம்
கிழக்கை பொறுத்தவரை நேற்றும் அடை மழையுடன் கூடிய கால நிலை சற்று தணிந்திருந்தாலும் திருகோண மலை மாவட்டத்தில் மழையுடன் கூடிய கால நிலை நீடித்தது. .இதனால் வெள்ளம் காரணமாக திருகோணமலையில் 10037 குடும்பங்களைச் சேர்ந்த 36169 பேரும் மட்டக்களப்பில் 124070 குடும்பங்களை சேர்ந்த 443691 பேரும் அம்பாறையில்19335 குடும்பங்களை சேர்ந்த 72552 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கை பொறுத்தவரை மொத்தமாக 486737 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 14896 குடும்பங்களை சேர்ந்த 14896 பேர் 142 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக கிழக்கில் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
வெள்ளம் காரணமாக கிழக்கில் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
வெள்ளம் காரணமாக கிழக்கில் 3387 வீடுகள் முற்றாகவும் 7067 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அந்த மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அந்த மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்டுள்ளன.
அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகமான பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்த நகரத்தின் வழமையான நடவடிக்கைகள் நேற்று ஓரளவு வழமிக்கு திரும்[பியிருந்தன.
அத்துடன் திஸ்ஸமஹராம உள்ளிட்ட அனுராதபுர குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் தொடர்ந்தும் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்கெடுத்துள்ளது.
அனுராதபுரம் பிரதேசத்தில் 6224 குடும்பங்களை சேர்ந்த 20884 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்ளதா கவும் குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பாதிக்கப்பட்டவர்களில் 908 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
அத்துடன் திஸ்ஸமஹராம உள்ளிட்ட அனுராதபுர குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் தொடர்ந்தும் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்கெடுத்துள்ளது.
அனுராதபுரம் பிரதேசத்தில் 6224 குடும்பங்களை சேர்ந்த 20884 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்ளதா கவும் குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பாதிக்கப்பட்டவர்களில் 908 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்திலும் வெள்ள அச்சுறுத்தல் தொடர்கின்றது. பொலன்னறுவையை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளதாகவும் இதனால் பல குளங்களின் வான் கதவுகள் நேற்றும் திறக்கப்பட்டிருந்ததாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.பொலன்னறுவை மாவட்டத்தை பொறுத்தவரை 3579 குடும்பங்களை சேர்ந்த 142571 பேர் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்பாலும் தடை பட்டுள்ள நிலையில் மகாபராக்கிரமபாகு, கவுடுல வாவி, மின்னேரிய குளம், ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வடக்கு நிலைவரம்
இதேவேளை நிலவும் சீரற்ற கால நிலையால் வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் 4656 பேரும் வவுனியாவில் 10634 பேரும், கிளிநொச்சியில் 10781 பேரும், முல்லை தீவில் 9715 பேரும் மன்னாரில் 8979 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இதனை விட வடக்கில் 45வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 3831 வீடுகள் பகுதியளவான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.
இதனை விட வடக்கில் 45வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 3831 வீடுகள் பகுதியளவான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.
மலையகம்
மலையகப் பகுதியில் மாத்தளை, கண்டி, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. மாத்தளையில் 750 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியாவில் 845 பேரும் கண்டியில்590 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றும் மலையகத்தில் பெய்த அடை மழை காரணமாக பிரதேசங்கள் பலவற்றினதும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன.
இதனை விட கண்டி, மினிப்பேயிலும் பேரதெனியவிலும் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக இரு மரணங்கள் பதிவாகின. அத்துடன் கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மட்டும் மண் சரிவு அச்சுறுத்தல் காரணமாக 108 குடும்பங்களை சேர்ந்த 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாணம்
மழை வெள்ளம் காரணமாக வடமேல் மாகாணத்தின் புத்தளம், குருணாகல் ஆகிய மவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளத்தில் 15389 பேரும் குருணாகலில் 339 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது. புத்தளத்தில் நேற்று பெய்த அடை மழை காரணமாக அனுராதபுரம் வீதியும் மன்னார் வீதியும் போக்கு வரத்துப் பாதிப்புக்களுக்கு உள்ளானது. அத்துடன் புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த பகுதியில் மட்டும் 6000 பேர் வரையில் பாதிக்கப்பட்டிருந்தனர். குறித்த கிராம மக்கள் படகு மூலமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணம்
இதேவேளை சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டித்திலும் அதிகளவன மழைவீழ்ச்சி பதிவகியுள்ளன.
மேல் மாகாணம்
இதேவேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகாணத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கி வரும் நிலையில் பகுதியளவில் இரு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வீடுகளில் வசித்த 8 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணம்
இதேவேளை சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டித்திலும் அதிகளவன மழைவீழ்ச்சி பதிவகியுள்ளன.
மேல் மாகாணம்
இதேவேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகாணத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கி வரும் நிலையில் பகுதியளவில் இரு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வீடுகளில் வசித்த 8 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
மழை வெள்ளம் காரணமாக புத்தளம், அனுராதபுரம் ஊடான வடக்கை நோக்கிய போக்குவரத்து பாதையும் ஹபரண, பொலன்னறுவை ஊடான கிழக்கை நோக்கிய போக்கு வரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை விட மலையகத்தின் மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மஹியங்கனை வீதியிலும் போக்கு வரத்து குறைந்துள்ளன. அத்துடன் குருணாகல், பாதெனிய ஊடான வடக்கு நோக்கிய போக்கு வரத்தும் முற்றாக தடை பட்டுள்ளன.