புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

வெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு

நாட­ளா­விய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை கார­ண­மாக 7 மாகா­ணங்­களில் 17 மாவட்­டங்கள் பாதிக்­கப்பட்­டுள்­ள­துடன் 12 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.
இந்த வாரத்­துக்குள் மட்டும் வெள்ளப் பெருக்கு, மண் ­ச­ரிவு ஆகிய அனர்த்­தங்­க­ளி­னா­லேயே இந்த 12 பேரும் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் நேற்று மாலைவரை 6 இலட்­சத்து 63 ஆயி­ரத்து 228 பேர்
பாதிக்­கப்பட்­டி­ருந்­தனர்.
அத்­துடன் 3519 வீடுகள் முற்­றா­கவும் 11366 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன. வெள்ள அனர்த்தம் அல்­லது நீரில் அடித்துச் செல்­லப்­பட்டு ஏற்­பட்ட மர­ணங்கள் 8 உம் மண்­ச­ரிவால் ஏற்­பட்ட மர­ணங்கள் மூன்றும் நேற்று மாலை­வரை பதி­வா­கி­யி­ருந்­தன. வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்­காக அர­சாங்கம் 35 மில்­லியன் ரூபாவை மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.ஹம்­பாந்­தோட்டை பீகொக் பீச் ஹோட்­டலில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்­க­ளுக்கு நீடிக்கும் நிலை உள்­ளது. மக்­களை பாது­காத்து மக்­க­ளுக்கு தேவை­யான சகல வச­தி­க­ளையும் செய்து கொடுக்க ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அவர்கள் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க உள்ளார் எனவும் அமைச்சர் மேலும் தெரி­வித்தார்.
வெள்ளம் கார­ண­மாக கிழக்கு மாகா­ணத்­துக்கே அதி­க­ள­வான பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் அம்­மா­க­ணத்தில் மட்டும் ஐந்து மர­ணங்கள் பதி­வா­கி­யுள்­ளன. அத்­துடன் எம்­பி­லி­பிட்­டிய பிர­தே­சத்தில் மூன்று மர­ணங்­களும் கண்டி மாவட்­டத்தில் மூன்று மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ளன. கண்டி மாவ்­வட்­டத்தில் பதி­வான மூன்று மர­ணங்­களும் மண் சரி­வினால் ஏற்­பட்­ட­தாகும்.
மலை­ய­கத்தின் மினிப்பே பிர­தே­சத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் சிக்கி அவர்­களில் இருவர் உயி­ரி­ழந்­த­தா­கவும் பேரா­தெ­னிய பிர­தே­சத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­த­தா­கவும் கண்டி மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் இந்­திக்க ரண­வீர தெரி­வித்தார்.
அத்­துடன் அனு­ரா­த­புரம், கஹட்­ட­கஸ்­தி­கி­லிய பிர­தே­சத்தில் வெள்ளம் கர­ண­மாக நபர் ஒருவர் காய­ம­டைந்­துள்­ள­துடன் வவு­னியா பிர­தே­சத்­திலும் ஒருவர் காய­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது. அத்­துடன் கண்டி மாவட்­டத்தில் மன்­ச­ரிவில் சிக்­கிய குழந்தை உள்­ளிட்ட மூன்று பேர் காய­ம­டிந்­துள்­ளனர்.
இதனை விட நேற்று மாலை ஆகும் போது பாதிக்­கப்­பட்­டி­ருந்த 650635 பேரில் 22941 குடும்­பங்­களை சேர்ந்த 80736 பேர் 334 நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­க­ளுக்கு தேவை­யான உலர் உண­வு­களை அனர்த்த நிவா­ரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்­கி­வ­ரு­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் ஊடகப் பேச்­சாளர் சரத் லால் குமார குறிப்­பிட்டார்.
மேல் மாகா­ணத்தில் தலை நகர் கொழும்பும் வடக்கின் யாழ்ப்­பாணம்,வவு­னியா, கிளி­நொச்சி, முல்லை தீவு,மன்னார் மாவட்­டங்­களும், கிழக்கின் திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு , அம்­பாறை மாவட்­டங்­களும் வட­மத்­திய மாகா­ணத்தின் அனு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை மாவட்­டங்­களும், வடமேல் மாகா­ணத்தின் குரு­ணாகல், புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களும் மத்­திய மாகா­ணத்தின் கண்டி, நுவ­ரெ­லியா மற்றும் மாத்­தளை ஆகிய மாவட்­டங்­களும் சப்­ர­க­முவ மாகா­ணத்தின் கேகா­லை­யிலும் அடை மழை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ளப் பெருக்­கி­னாலும் ஊவா மாகா­ணத்தின் பதுளை மாவட்டம் மண்­ச­ரிவு அச்­சு­றுத்­த­லாலும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது.
இந்த அடை­மழை கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள வெள்­ளத்­தினால் கிழக்­கிற்கே அதிக பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன.
கிழக்கு நிலை­வரம்

கிழக்கை பொறுத்­த­வரை நேற்றும் அடை மழை­யுடன் கூடிய கால நிலை சற்று தணிந்­தி­ருந்­தாலும் திரு­கோண மலை மாவட்­டத்தில் மழை­யுடன் கூடிய கால நிலை நீடித்­தது. .இதனால் வெள்ளம் கார­ண­மாக திரு­கோ­ண­ம­லையில் 10037 குடும்­பங்­களைச் சேர்ந்த 36169 பேரும் மட்­டக்­க­ளப்பில் 124070 குடும்­பங்­களை சேர்ந்த 443691 பேரும் அம்­பா­றையில்19335 குடும்­பங்­களை சேர்ந்த 72552 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கிழக்கை பொறுத்­த­வரை மொத்­த­மாக 486737 பேர் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்­களில் 14896 குடும்­பங்­களை சேர்ந்த 14896 பேர் 142 நலன்­புரி முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
வெள்ளம் கார­ண­மாக கிழக்கில் ஐந்து மர­ணங்கள் பதி­வா­கி­யுள்­ளன.
வெள்ளம் கார­ண­மாக கிழக்கில் 3387 வீடுகள் முற்­றா­கவும் 7067 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பி­டு­கின்­றது.
கிழக்கு மாகா­ணத்தின் பெரும்­பா­லான விளை நிலங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­துடன் அந்த மாகாண மக்­களின் இயல்பு வாழ்க்­கையும் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்­வாறு வெள்­ளத்தால் பாதிக்­கப்ப்ட்­டுள்­ளன.
அனு­ரா­த­புரம்
அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் அதி­க­மான பகுதி நீரில் மூழ்­கி­யுள்ள நிலையில் அந்த நக­ரத்தின் வழ­மை­யான நட­வ­டிக்­கைகள் நேற்று ஓர­ளவு வழ­மிக்கு திரும்[­பி­யி­ருந்­தன.
அத்­துடன் திஸ்­ஸ­ம­ஹ­ராம உள்­ளிட்ட அனு­ரா­த­புர குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் தொடர்ந்தும் மல்­வத்து ஓயாவின் நீர்­மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்­கெ­டுத்­துள்­ளது.
அனு­ரா­த­புரம் பிர­தே­சத்தில் 6224 குடும்­பங்­களை சேர்ந்த 20884 பேர் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்­ளதா கவும் குறிப்­பிட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 908 குடும்­பங்­களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்­புரி நிலை­யங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏனையோர் உற­வினர் வீடு­களில் தஞ்சம் அடைந்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டனர்.
பொலன்­ன­றுவை
பொலன்­ன­றுவை மாவட்­டத்­திலும் வெள்ள அச்­சு­றுத்தல் தொடர்­கின்­றது. பொலன்­ன­று­வையை பொறுத்­த­வரை அங்கு பெரும்­பா­லான குளங்கள் நிரம்­பி­யுள்­ள­தா­கவும் இதனால் பல குளங்­களின் வான் கத­வுகள் நேற்றும் திறக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் நீர்ப்­பா­சன திணைக்­களம் தெரி­வித்­தது.பொலன்­ன­றுவை மாவட்­டத்தை பொறுத்­த­வரை 3579 குடும்­பங்­களை சேர்ந்த 142571 பேர் மழை வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இப்­பி­ர­தே­சத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்­பாலும் தடை பட்­டுள்ள நிலையில் மகா­ப­ராக்­கி­ர­ம­பாகு, கவு­டுல வாவி, மின்­னே­ரிய குளம், ஆகி­ய­னவும் பெருக்­கெ­டுத்­துள்­ளன. இதன் கார­ண­மாக ஆயிரக் கணக்­கான பயிர் நிலங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.
வடக்கு நிலை­வரம்
இதே­வேளை நிலவும் சீரற்ற கால நிலையால் வடக்கின் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்­டங்கள் பாதிப்­புக்­களை சந்­தித்­துள்­ளன. யாழ்ப்­பா­ணத்தில் 4656 பேரும் வவு­னி­யாவில் 10634 பேரும், கிளி­நொச்­சியில் 10781 பேரும், முல்லை தீவில் 9715 பேரும் மன்­னாரில் 8979 பேரும் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது.
இதனை விட வடக்கில் 45வீடுகள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் 3831 வீடுகள் பகு­தி­ய­ள­வான பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன.
மலை­யகம்
மலை­யகப் பகு­தியில் மாத்­தளை, கண்டி, மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் தொடர்ந்தும் அடை­மழை பெய்து வரும் நிலையில் வெள்­ளத்­தினால் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் குறிப்­பி­டு­கின்­றது. மாத்­த­ளையில் 750 பேர் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் நுவ­ரெ­லி­யாவில் 845 பேரும் கண்­டியில்590 பேரும் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் நேற்றும் மலை­ய­கத்தில் பெய்த அடை மழை கார­ண­மாக பிர­தே­சங்கள் பல­வற்­றி­னதும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்­பித்­துள்­ளன.
இதனை விட கண்டி, மினிப்­பே­யிலும் பேர­தெ­னி­ய­விலும் ஏற்­பட்ட மண் சரிவு கார­ண­மாக இரு மர­ணங்கள் பதி­வா­கின. அத்­துடன் கண்டி, நுவ­ரெ­லியா, கேகாலை மற்றும் பதுளை ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளுக்­கான மண் சரிவு அபாய எச்­ச­ரிக்கை அடுத்த 24 மணி நேரத்­துக்கு நீடிக்­கப்­பட்­டுள்­ளது. பதுளை மாவட்­டத்தில் மட்டும் மண் சரிவு அச்­சு­றுத்தல் கார­ண­மாக 108 குடும்­பங்­களை சேர்ந்த 384 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
வடமேல் மாகாணம்
மழை வெள்ளம் கார­ண­மாக வடமேல் மாகா­ணத்தின் புத்­தளம், குரு­ணாகல் ஆகிய மவட்­டங்கள் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. புத்­த­ளத்தில் 15389 பேரும் குரு­ணா­கலில் 339 பேரும் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது. புத்­த­ளத்தில் நேற்று பெய்த அடை மழை கார­ண­மாக அனு­ரா­த­புரம் வீதியும் மன்னார் வீதியும் போக்கு வரத்துப் பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­னது. அத்­துடன் புத்­தளம் கரு­வ­ல­கஸ்­வெவ பிர­தே­சத்தின் இயல்பு வாழ்க்கை முற்­றாக பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் குறித்த பகு­தியில் மட்டும் 6000 பேர் வரையில் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். குறித்த கிராம மக்கள் படகு மூல­மாக பாது­காப்­பான இடங்­க­ளுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.
சப்­ர­க­முவ மாகாணம்
இதே­வேளை சப­ர­க­முவ மாகா­ணத்தின் கேகாலை மாவட்­டித்­திலும் அதி­க­ள­வன மழை­வீழ்ச்சி பதி­வ­கி­யுள்­ளன.
மேல் மாகாணம்
இதே­வேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகா­ணத்தின் பல பிர­தே­சங்­க­ளிலும் தொடர்ச்­சி­யான மழை வீழ்ச்சி காணப்­பட்­டது. இதன் கார­ண­மாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்­கா­லி­க­மாக வெள்­ளத்தில் மூழ்கி வரும் நிலையில் பகு­தி­ய­ளவில் இரு வீடு­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டுள்ள நிலையில் அந்த வீடு­களில் வசித்த 8 பேர் பாதிக்­கப்ப்ட்­டுள்­ளனர்.
சப்ரகமுவ மாகாணம்
இதேவேளை சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டித்திலும் அதிகளவன மழைவீழ்ச்சி பதிவகியுள்ளன.
மேல் மாகாணம்
இதேவேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகாணத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கி வரும் நிலையில் பகுதியளவில் இரு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வீடுகளில் வசித்த 8 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.
போக்­கு­வ­ரத்து பாதிப்பு
மழை வெள்ளம் கார­ண­மாக புத்­தளம், அனு­ரா­த­புரம் ஊடான வடக்கை நோக்­கிய போக்­கு­வ­ரத்து பாதையும் ஹப­ரண, பொலன்­ன­றுவை ஊடான கிழக்கை நோக்­கிய போக்கு வரத்தும் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இதனை விட மலையகத்தின் மண்­ச­ரிவு அபாயம் கார­ண­மாக பதுளை மஹி­யங்­கனை வீதி­யிலும் போக்கு வரத்து குறைந்­துள்­ளன. அத்துடன் குருணாகல், பாதெனிய ஊடான வடக்கு நோக்கிய போக்கு வரத்தும் முற்றாக தடை பட்டுள்ளன.

ad

ad