பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கத்தால் நடாத்தப்பட்ட “காற்றுவழிக் கிராம நிகழ்வு 2014″ கடந்த சனிக்கிழமை (20.12.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.(படங்கள்,காணொளி )
பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் மேற்படி “காற்றுவழிக் கிராம 2014″ நிகழ்வின்
- பிரதம விருந்தினராக புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்டவரும், லண்டனில் வதியும் திரு. பிரேமானந்தன் சிவசாமி (லைக்கா மொபைல் துணைத் தலைவர்) தம்பதியினரும்,
- கௌரவ விருந்தினர்களாக திரு. கணா நகீரதன் (ப்ரெண்ட் மாநில மேயரான இலங்கைத் தமிழர்)
- அவர்களும் மற்றும் திரு. சுரேஸ் கிருஷ்ணா (ஹர்ரோவ் மாநில துணை மேயர்) அவர்களும்
- திருமதி சசிகலா சுரேஷ் (ஹர்ரோவ் மாநில கௌன்சிலர் ) அவர்களும்,
- சிறப்பு விருந்தினராக புங்குடுதீவு சர்வோதய ஒருங்கிணைப்பாளர் செல்வி ஜமுனாதேவிஅவர்களும் கலந்து சிறப்பித்திருநதனர்.
மேற்படி நிகழ்வில் நாட்டிய, நடனம் மற்றும் நகைச்சுவை நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன்,
புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தால் நடாத்தப்பட்ட காற்றுவழிக் கிராம நிகழ்வில் “மண்ணின் மைந்தர்களாக”..
- திரு. கமலநாதக் குருக்கள் ஐயா மற்றும்
- திரு. டொக்டர் சண்முகலிங்கம் (மகப்பேறு வைத்தியர்),
- திரு. கிருபானந்தவேல் (மக்கள் சேவையாளர்),
- திரு. சிவபாலன் (எழுத்தாளர்),
- திருமதி. ஆனந்தி கருணைலிங்கம் (முதற்பெண் மருத்துவர்) ஆகியோர்
“மண்ணின் மைந்தர்களின் சிறப்பு விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுடன் பிரித்தானிய பல்கலைக் கழகத்தில் இவ்வாண்டு தமது படிப்பை சிறப்பாக முடித்து வெளியேறும் “புங்குடுதீவு வழித் தோன்றல்களின்” வாரிசுகளான முப்பத்தொரு (31) மாணவ மாணவிகள் “கேடயம்” வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
தவிர்க்க முடியாமல், நேரம் போதாமையினால் இறுதிநேர நிகழ்ச்சியை முழுமையாக நடத்த முடியாமல் போனதையிட்டு பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் சார்பில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேற்படி நிகழ்வினை திரு. குணா, திருமதி வத்சலா ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தகவல்,
திருமதி. விஜயகுமாரி பரமகுமரன்,
லண்டன்.
24.12.2014
திருமதி. விஜயகுமாரி பரமகுமரன்,
லண்டன்.
24.12.2014
951 – PHOTOS ON FACEBOOK PART 1 Pungudutivu Pwa-uk
476 – PHOTOS ON FACEBOOK PART 2 Pungudutivu Pwa-uk
(**நீங்கள் இந்த செய்தியில் உள்ள படங்களை பெரிதாக்கி பார்க்க விரும்பினால், அந்த படத்தின் மேல் “கிளிக்” பண்ணி பெரிதாக்கிப் பார்க்கவும்.)
காற்று வெளிக்கிராமம் புது வீச்சுடன் பொலிவுற வாழ்த்துகின்றோம்…
கடலும் கடல் சார்ந்த நெய்தலுமாகி
வயலும் வயல் சார்ந்த மருதமுமாகி
மணலும் மணல் சார்ந்த பாலையுமாகி
ஐவகை நிலங்களில் மூவகை நிலங்களைத்
தன்னகத்தே கொண்டு முதற்பொருளாய் நேற்று வரை
நாம் அழகுற வீற்றிருந்த வீடு!
அறிவுசால் கூடங்களும் பக்தி நெறி வளர்க்கும்
ஆலயங்களும் நிறைந்து உற்றாருடன் உறவினரும்
கற்றோருடன் மற்றோரும் பெற்றோரைப் போலப்
பேணிக் காத்திட்ட சிறு கூடு!
ஆலயங்களும் நிறைந்து உற்றாருடன் உறவினரும்
கற்றோருடன் மற்றோரும் பெற்றோரைப் போலப்
பேணிக் காத்திட்ட சிறு கூடு!
அது தான் எங்கள் காற்று வெளிக்கிராமம்
அறிவூற்றின் ஒளிக்கிராமம்! புயற் காற்றிடை மரமெனச்
சாய்ந்ததொரு காலம்! மரங்கள் மட்டுமல்ல மனித
மனங்களும் சாய்ந்துளது! புண்பட்ட மனங்களை தேற்றிட
ஆற்றிட கருமமே கண்ணாய் களப்பணி புரிகிறது
புங்குடுதீவு நலன் புரிச்சங்கம்..
அறிவூற்றின் ஒளிக்கிராமம்! புயற் காற்றிடை மரமெனச்
சாய்ந்ததொரு காலம்! மரங்கள் மட்டுமல்ல மனித
மனங்களும் சாய்ந்துளது! புண்பட்ட மனங்களை தேற்றிட
ஆற்றிட கருமமே கண்ணாய் களப்பணி புரிகிறது
புங்குடுதீவு நலன் புரிச்சங்கம்..
பிரித்தானியா நாடெங்கும் வதியும்
புங்குடுதீவுத் தாயின் பிள்ளைகளே!
காடும் காடு சார்ந்த நிலமான முல்லைகள் போல
நெருக்கமுடன் உதவிட உருக்கமுடன் வாரீர்!
எமுதூர்ச் சூழலின் சமநிலை பேணுவோம்.
காற்று வெளிக்கிராமம் காத்திட மலையும் மலை சார்ந்த
குறிஞ்சி நிலமாய் எழுந்து அரணாய் நிற்பீர்! துணையாய் நிற்பீர்!
புங்குடுதீவுத் தாயின் பிள்ளைகளே!
காடும் காடு சார்ந்த நிலமான முல்லைகள் போல
நெருக்கமுடன் உதவிட உருக்கமுடன் வாரீர்!
எமுதூர்ச் சூழலின் சமநிலை பேணுவோம்.
காற்று வெளிக்கிராமம் காத்திட மலையும் மலை சார்ந்த
குறிஞ்சி நிலமாய் எழுந்து அரணாய் நிற்பீர்! துணையாய் நிற்பீர்!
காற்று வெளிக்கிராமம் புது வீச்சுடன் பொலிவுற வாழ்த்துகின்றோம்…
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சற்லாந்து. 20.12.2014.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சற்லாந்து. 20.12.2014.
https://www.youtube.com/watch?v=YDXm_orwyS8
https://www.youtube.com/watch?v=RrD8REexlms
https://www.youtube.com/watch?v=fv-3dZvT6QI