இந்த வாக்குமூல பதிவு நேற்று மேற்கொள்ளப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்கவும் பொதுவேட்பாளர் மைத்திரியும் இரகசிய உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டதாக கூறி திஸ்ஸ அத்தநாயக்க ஆவணம் ஒன்றை வெளியிட்டார்.
எனினும் இந்த ஆவணத்தில் இடப்பட்டுள்ள கையொப்பங்கள் தம்முடையது அல்ல என்று ரணிலும் மைத்திரியும் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் பொலிஸ்மா அதிபரிடமும் முறைப்பாட்டை செய்திருந்தனர். இதேவேளை, குறித்த முறைப்பாடு தொடர்பில், விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
இதன்போது, நிபுணர்களின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.