புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

ரணில், மைத்திரியின் வாக்குமூலங்கள் பதிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீது செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும்
ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த வாக்குமூல பதிவு நேற்று மேற்கொள்ளப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்கவும் பொதுவேட்பாளர் மைத்திரியும் இரகசிய உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டதாக கூறி திஸ்ஸ அத்தநாயக்க ஆவணம் ஒன்றை வெளியிட்டார்.
எனினும் இந்த ஆவணத்தில் இடப்பட்டுள்ள கையொப்பங்கள் தம்முடையது அல்ல என்று ரணிலும் மைத்திரியும் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் பொலிஸ்மா அதிபரிடமும் முறைப்பாட்டை செய்திருந்தனர்.  இதேவேளை, குறித்த முறைப்பாடு தொடர்பில், விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
இதன்போது, நிபுணர்களின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ad

ad