புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

பதுளையில் மண்சரிவு - ஐவர் பலி! 14 பேர் மாயம


பதுளையில் இடம்பெற்ற இருவேறு மண்சரிவுகளில் இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை, அங்தெனிய மற்றும் அதையண்டிய பிரதேசங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவுகளில் 07 பேரைக் காணவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பதுளையில் இடம்பெற்ற இருவேறு மண்சரிவு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பிறிதொரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 க உயர்வு! 14 பேரைக் காணவில்லை
பதுளை ரில்பொல என்னும் இடத்தில் ஏற்பட்ட மண் சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 14 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது. வீடுகளின் மீது பாரியளவில் மண் சரிந்து வீழ்ந்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மண் சரிவில் சிக்குண்ட பெண் தாதியொருவர் தம்மை காப்பாற்றுமாறு வெளியில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் அடிக்கடி அழைப்பினை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பதுளை வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதி ஒருவரே இவ்வாறு உதவி கோரி வருகின்றார்.
இராணுவத்தினரும் மீட்புப் பணியில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad