புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2014

பொறியியல் மாணவர்கள் 40 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு திடுக்கிடும் தகவல் வெளியீடு
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் மகாராஷ்டிரத்தின் அன்ஜூமன் இஸ்லாம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 40 பேர் தொடர்பில் இருந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் கல் யாண் பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் மஜீத்.

சிவில் பொறியியலாளரான இவர் தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து, ஈராக் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிர வாத அமைப் புடன் இணைந்து செயற்பட்டவர்.

அங்கு மோசமாக நடத்தப்பட்ட தால் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி அண்மையில் நாடு திரும்பினார்.

அவரை பொலிஸார் மும்பை விமான நிலையத்திலேயே கைது செய்தனர். அவரது வெளிநாட்டு தீவிரவாத தொடர்புகள், இந்தியாவில் அவருடன் தீவிரவாத தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அதில். மஜீத் படித்த அன்ஜூமன் இஸ்லாம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 40 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவருமே இணையதளம் மூலம் தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதிலும், அவர்களின் செயற்பாடுகளை அறிந்து கொள்வதிலும் தீவிரமாக இருந்து ள்ளனர்.

மத கொள்கைகளை பின்பற்று வதிலும், போதிப்பதிலும் தீவிரமாக செயற்பட்டுள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப் புடன் இணைந்து போரிட காத்திருந்துள்ளனர்.

விசாரணை அமைப்பினர் இவர்கள் அனைவரையும் பிடித்து விசாரணை மேற் கொள்ள இருக்கின்றனர்.

இது தொடர்பாக தீவிரவாத தடுப்புப் படை தலைவர் ஹிமான்சு ராய் கூறுகையில், அந்த கல்லூரியில் தீவிரவாத கொள்கையுடன் குழுவாக செயற்பட்டவர்களை ஏற்க னவே கண்டறிந்து விட்டோம். விசாரணையும் ஏற்கனவே தொடங்கி விட்டது என்றார்.

பொலிஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாக அன்ஜூமன் இஸ்லாம் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ். ஐ.எஸ். முகாம்களில் 20க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை தான் பார்த்ததாக மஜீத் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

இஸ்லாமிய அரசை உருவாக் கும் அமைப்பு என்ற பெருமிதத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் மஜீத் இணைந்துள்ளார்.

ஆனால் கொலை யும் பாலியல் பலாத்காரமும்தான் அவர்கள் முக்கிய வேலை என் பதை அங்கு சென்று தெரிந்து கொண்ட மஜீத் அதிர்ச்சியடைந்தார்.

இந்தியர்கள் உடல் அளவில் பல வீனமானவர்கள் என்று
கூறி மஜீத், அவரது நண்பர்களுக்கு போரிட வாய் ப்பு தரவில்லை.

கழிவறைகளை கழுவுவது போன்ற வேலைகளை செய்துள்ளார். இதனால் மஜீத் தப்பி இந்தியாவுக்கு வந்து விட்டார் என விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
      
 

ad

ad