புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2015

ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி : ஜெயலலிதா அறிவிப்பு!

அதிமுகவின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக  எஸ்.வளர்மதி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அடுத்த மாதம் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 25 ஆம் தேதி முதல் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் தொகுதியில் 10 நாட்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

பாஜக  சார்பில், சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த நெப்போலியனும், காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்பூவும் போட்டிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளராக எஸ்.வளர்மதி போட்டியிடுவார் என்று ஜெயலலிதா இன்று அறிவித்தார். திருச்சி மாவட்ட அதிமுக இணை செயலாளரான வளர்மதி, திருச்சி மாநகராட்சி  58 ஆவது வார்டு உறுப்பினராகவும் உள்ளார்.

ad

ad