எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பயணத்தை மேற்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரத்தில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இலங்கை ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ அழைப்பை இந்தியா விடுத்திருந்தது.
இந்தநிலையில் மங்கள சமரவீர தற்சமயம் அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.