டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஒபாமா,
இந்தியாவுடனான உறவு அமெரிக்காவின் வளர்ச்சிக்கு அவசியமானது. இந்தியாவும் அமெரிக்காவும் நீண்ட காலமாக உறுதியான உறவைப் கொண்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிக்கப்படும்.
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக நாங்கள் ஆதரவளிப்போம். சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதியில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. ஐ.நா.வின் அமைதித் திட்டத்தில் இந்தியா பல ஆண்டுகளாக முக்கியப்பங்கு வகிக்கிறது. மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது என்றார்.