புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2015

டெல்லிக்கு மாநில அந்தஸ்து: மோடியிடம் நேரில் கோரிக்கை வைத்த கெஜ்ரிவால்

பிரதமரின் இல்லத்தில் மோடியை இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம்
ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, புதிய அரசு அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நேற்று மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரை மரியாதை நிமித்தமாக கெஜ்ரிவால் சந்தித்து பேசியுள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடியை இன்று காலை டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் 10.30 மணியளவில் கெஜ்ரிவால் சந்தித்து பேசியுள்ளார்.
அவருடன் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான மணிஷ் சிசோடியாவும் உடன் சென்றார்.
அப்போது கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியிடம், தனது பதவியேற்பு விழாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
15 நிமிடம் நடந்த இந்த சந்திப்புக்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய சிசோடியா, பிரதமருடனான சந்திப்பின்போது நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்தாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று பிரதமர் கூறியதாக சிசோடியா கூறியுள்ளார்.

ad

ad