புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2015

நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாது!– ரதன தேரர்


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாது ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் கட்சியும் அரசாங்கம் அமைக்கும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாது.
எனவே பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க முடியும்.
நாட்டின் அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியும்ää ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டுமென அதுரலிய ரதன தேரர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

ad

ad