புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2015

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்!- டேவிட் மிலிபான்ட்


இலங்கையில் இடம்பெற்ற மனித நேயத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று தொழிற்கட்சியின் தலைவர் டேவிட் மிலிபான்ட் கோரியுள்ளார்.
தமிழ் புதுவருடத்துக்காக வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகள் உட்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் பொதுவாழ்க்கைக்கு ஒத்துழைப்பை வழங்குகின்ற தமிழர்களுக்கு இந்த வேளையில் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.
தொழிற்கட்சி எப்போதும் தமிழ் சமூகத்துடன் நட்புடன் இருந்து வருகிறது. அது தொடரும் என்றும் மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.

ad

ad