புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2015

எனது மகள் குவைத்தில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்! மரணத்தில் சந்தேகம்: உண்மை நிலையை அறியுமாறு தாயார் பொலிஸில் முறைப்பாடு


உப முகவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியை சட்டபூர்வமற்ற முறையில் குவைத் நாட்டிற்கு அனுப்பிய உப முகவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறித்த யுவதியின் தாய் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் சர்நீதியா (வயது 22) என்ற யுவதி கடந்த 28.02.2015 அன்று குவைத் நாட்டில் உயிரிழந்தார். இவரின் சடலம் 15.03.2015 அன்று மட்டக்களப்பு கொண்டுவரப்பட்டு சத்துருக்கொண்டானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த யுவதியின் தாய் சோமசுந்தரம் கீதா என்பவர் குவைத் நாட்டிற்கு தனது மகளை சட்டபூர்வமற்ற முறையில் அனுப்பிய காத்தான்குடியைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், எனது மகளை காத்தான்குடியைச் சேர்ந்த குறிப்பிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் பல தடவை எனது மகள் சர்நீதியாவின் வீட்டிற்கு வந்து குவைத்தில் நல்ல வீட்டு வேலை இருப்பதாகவும் கூடிய சம்பளம் கிடைக்குமெனவும் பொய் கூறி அவரை குவைத் நாட்டிற்கு அனுப்பினார்.
இவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமலும், இவருக்கு வெளிநாடு செல்வதற்கான காப்புறுதி செலுத்தாமலும் குறித்த உப முகவர் கொழும் பிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தி னூடாக வீட்டு வேலைக்கான வீஸா இல்லாமல் விஸிட் எனப்படும் விஸா மூலம் சட்டபூர்வமற்ற முறையில் குவைத் நாட்டிற்கு அனுப்பியி ருந்தார். உயிரிழந்த எனது மகளின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சென்று இது தொடர்பாக அறிய முற்பட்ட போதுதான் சட்டபூர்வமற்ற முறையில் எந்த பதிவுகளு மின்றி எனது மகளை குவைத் நாட்டிற்கு அனுப்பியிருந்தமை தெரியவந்தது.
எனது மகளின் சடலத்துக்கு மேலே வைக்கப்பட்டவாறு மகளின் கடவுச்சீட்டு மாத்திரமே வந்தது. மகள் உயரமான மாடி யிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த தாக பின்னர் கிடைக்கப்பெற்ற மரணத்திற்கான காரணம் எழுதப்பட்ட அறிக்கையொன்றின் மூலம் அறிந்து கொண் டேன். எனது மகள் குவைத்தில் கொலை செய்யப்பட்டி ருக்கின்றார். அவரை கொலை செய்துள்ளனர் என்று நினைக் கின்றேன். எனது மகளின் மரணம் தொடர்பில் எந்தவொரு நஸ்டஈடும் இதுவரை கிடைக் கப்பெறவில்லை. ஒரு ரூபாய் பணம் கூட குவைத்தி லிருந்தோ அல்லது அனுப்பிய முகவரிடமிருந்தோ கிடைக்க வில்லை.

ad

ad