புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2015

புதிய அரசின் வாக்குறுதிகள் செயல் வடிவம் பெறுவதில் கால தாமதம்: தமிழர் பட்ட அவலங்களுக்கு தீர்வை பெற்றுத் தருவது ஐ.நா வின் பொறுப்புகூட்டமைப்பு.



இலங்கையில் தமிழர் எதிர்நோக்கிய அவலங்களுக்கு ஐ.நா. நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன் நிரந்தர
அரசியல் தீர்வையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசார ணையில் எமக்கு நம்பிக்கையில்லை என்று இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப்பிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா. விசாரணை அறிக்கையையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம் ஐ. நா. விசாரணை அறிக்கையின் பிரகாரம் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் ஆட்சி பீடத்தில் ஏறிய புதிய அரசு, தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினை களுக்கும் தீர்வு காண்போம் என்று வாக்குறுதியளித்துள்ளது.
ஆனால், இந்த வாக்குறுதிகளை செயலில் காட்டுவதில் தாமதம் காட்டுகின்றது புதிய அரசு. எனவே, வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம், இராணுவக் குறைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணா மல்போனோர் விவகாரம் உட்பட மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கும், இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கும் உடன் தீர்வை வழங்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மேலும் சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சினை ஒலிக்க இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதற்கு ஐ.நாவின் அழுத்தம் தொடர்ந்து இருக்கவேண்டும் என்றும் அவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஐ. நா. சிறப்பு நிபுணர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ad

ad