புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2015

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியினர் இருக்கவில்லை!– சகலரும் மாத்தறையில்


நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் எவரும் இருக்கவில்லை நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்தன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. எல்லோரும் மாத்தறைக்கு சென்றுள்ளனர் என சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
சபையில் எதிர்க்கட்சி ஆசனங்கள் வெறுமையாக இருந்ததை பார்த்து அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அப்போது சபையில் ஒருவர் இருப்பதாக சபை அமர்வுகளுக்கு தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி ஆசன வரிசையில் டியூ. குணசேகர மாத்திரம் அமர்ந்திருந்தார். அப்போது ஆளும் கட்சி வரிசையில் இருந்த அமைச்சர் மங்கள சமரவீர, நானும் மாத்தறையை சேர்ந்தவன், நீங்களும் மாத்தறையை சேர்ந்தவர். நாங்கள் இங்கிருக்கின்றோம். இங்குள்ளவர்கள் மாத்தறையில் எனச் சிரித்துக் கொண்டு குறிப்பிட்டார்.

ad

ad