புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2015

சமல் ராஜபக்சவை பிரதமராக்க கோத்தபாய ஆதரவு


எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்சவை பெயரிடுவதென்றால் அதற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான இணக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் பிவித்துரு ஹெட்டக் அமைப்பின் பிரதானியான அஷோக் அபே குணவர்தன ஆகியோர் சமீபத்தில் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருங்கிய ஒருவரான திலந்த ஜயவீரவும் கலந்துகொண்டுள்ளார்.
இலங்கை அரசியல்வாதிகளின் நடத்தை தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதாகவும், எனவே செயற்பாட்டு அரசியலுக்கு வருவதற்கு எண்ணம் இல்லை எனவும் கோத்தபாய ராஜபக்ச இச்சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரிடம் வினவியுள்ளது.
இச்சந்திப்பு குறித்து தகவல்கள் வெளியாகிய போதிலும், ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களில் எவரையும் பிரதமர் வேட்பாளராக பெயரிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயத்தமாக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad