புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2015

விடுதலைப்புலிகளின் போராளி என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் கைது


விடுதலைப்புலிகளின் போராளி என்று சந்தேகிக்கப்படும் மற்றும் ஒருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரகுரு என்பவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் போலிக்கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் விசாரணையின் போது குமரகுரு தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போது, அவருடைய நண்பரான மொஹமட் அலி என்பவரே குமரகுருவுக்கு போலி கடவுச்சீட்டை பெறுவதற்கு உதவினார் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் என்று கருதப்படும் ஒருவர் கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இன்றைய கைது சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

ad

ad