புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2015

சசிபெருமாள் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி


சசிபெருமாள் உடல் இன்று காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் மல்லூர் வந்தது. அதன்பிறகு சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மற்றும் சேலம் நகரின் வழியாக சசி பெருமாளின் சொந்த ஊரான இ.மேட்டுக்காடுக்கு வந்து சேர்ந்தது. அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், ம.தி.மு.க. பொதுச்செயலளார் வைகோ மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, இன்று மாலை சேலம் வருகிறார். அவர் சசிபெருமாள் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.  இதேபோல தி.மு.க. பொதுச் செயலளார் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

சசிபெருமாளின் உடல் அவர் வசித்து வந்த வீட்டுக்கு அருகில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சசி பெருமாளின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பல்வேறு கட்சியினரும் திரளாக வந்து இருந்தனர்.  இதையடுத்து இந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ad

ad