புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2015

பாலேந்திரன் ஜெயகுமாரி, புதன்கிழமை (03) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலேந்திரன் ஜெயகுமாரி மீண்டும் கைது:-

கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி, நேற்று புதன்கிழமை (03) மீண்டும் கைது
செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (01) அவருக்கான இரண்டாவது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கெப்பற்றிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜரானார்.

அங்கிருந்து, அவருக்கான வழக்கு பதவிய நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற அவருக்கு, பிணை வழங்கப்படுவது மறுக்கப்படு அவர் கைது செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்தும் பிணையில் விடுவிக்க பொலிஸார் மறுப்புத் தெரிவித்த போதிலும், அதை மீறி அவருக்கு, 25,000 ரூபாய் ரொக்கப் பிணையும் 100,000 ரூபாய் பெறுமதியிலான சரீரப் பிணையும் வழங்கப்பட்டது.

எனினும், சரீரப் பிணையில் கைச்சாத்திடுவோர், அவர்களது பகுதி கிராம சேவகர்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்ற நீதவானது நிபந்தனையை பூர்த்தி செய்யாத காரணத்தால், ஜெயகுமாரியினது பிணை நிராகரிக்கப்பட்டது.
 

ad

ad