லயோலோ கல்லூரியின் கருத்துக்கணிப்பு சமீபத்தில் வெளியானது. இதில், திமுகவில் அடுத்த முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் கலைஞரை விட பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த மு.க.அழகிரி, ‘’திமுக என்றால் அது கலைஞர்தான்; வேறு யாருமில்லை. கலைஞரைத்தவிர வேறு யாரையும் தி.மு.க. தொண்டர்கள் முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1.15 மணிக்கு தனது மனைவி காந்தியுடன் ஹாங்காங் புறப்பட்டு சென்றார்.
அப்போது அவரிடம், ‘’ திமுகவில் சிலர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று கூறி வருகிறார்களே?’’என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘’ இதற்கு இப்போது பதில் அளிக்க விரும்பவில்லை. வந்து சொல்கிறேன்’’ என்று கூறிவிட்டு சென்றார்.