புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2015

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் காலமானார்

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும், முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான, கருப்பையா வேலாயுதம் சுகயீனம் காரணமாக இன்று காலமானார்.
இவர் ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளரும் பிரபல தொழிற்சங்கவாதியுமான வேலாயுதம் பதுளை மவாட்ட பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியவர்.
கடந்த நல்லாட்சியில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்தார்.
1988ஆம் ஆண்டு முதன் முதலாக பதுளை மாவட்டத்தில் வெற்றிபெற்ற வேலாயுதம், அதற்கு பின்னர் 1993,1999ஆம் ஆண்டுகளில் மாகாண சபைகளில் வெற்றி பெற்றார்.
2001ஆம் ஆண்டு முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர் அவர், 2004ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார்.
மீண்டும் அதே ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்று 2009ஆண்டு தேர்தலின் வெற்றி பெற்று மாகாண சபைக்கு தெரிவானார்.
2010ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அவர் தெரிவு செய்யப்படாவிட்டாலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவின் இராஜினாமாவை அடுத்து, அவர் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.
இவ்ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவர் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களது சம்பளப் பிரச்சினை தீர்த்து வைக்கவும் அயராது பாடுபட்ட ஒரு தொழிற்சங்கவாதியாகும்.
மீரியபெத்த மண்சரிவு அடுத்து மலையக மக்களுக்கு பசுமை பூமி திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுக்க முன் நின்று செயல்பட்டார்.
அண்மைக்காலமாக சுகவீனமுற்ற நிலையில், மேலதிக சிகிச்சைக்காக இந்தியாவில் நந்தவனம் அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலாயுதம் இன்று பி.பகல் காலமானார்.

ad

ad