மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நேற்று முற்பகல் 9.37 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஜேர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார்.
கட்டார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான கியூ.ஆர். 665 ரக பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜேர்மனிக்கு பயணித்தனர்.
ஜேர்மனி அதிபர் அன்ஜலா மோர்க்கல், வெளிவிவகார அமைச்சர், வர்த்தக விவகார அமைச்சர் உள்ளிட்ட பலருடன் ஜனாதிபதி தலைமயிலான பிரதிநிதிகள் சந்திப்புக்களை நடாத்த உள்ளனர்.
மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்ரியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஒஸ்ரியா விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரி, அந்நாட்டு ஜனாதிபதி ஹெய்ன்ஸ் பித்ஸ்னருடன் சந்திப்பு நடத்த உள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அரச தலைவர் மட்டுமன்றி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் வெளிநாட்டு விஜயங்களின் போது தனியான விமானங்களைப் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.