ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தவிர்த்தார் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்திலேயே மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அவசரமாக விலகினார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.