புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2016

என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனை காதலித்ததால் பலிவாங்கினேன்: வினுப்பிரியா தற்கொலை வழக்கில் சுரேஷ் அதிர்ச்சி தகவல்கள்


பேஸ்புக்கில் ஆபாசமாக மார்பிங் செய்து போட்டோ வெளியிடப்பட்டதால் சேலம் மகுடஞ் சாவடியில் வினுப்பிரியா தற்கொலை செய்துகொண்டார்.   இந்த வழக்கில் சுரேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர் க்ரைம் போலீஸ்.   வினுப்பிரியாவை தவறாக சித்தரித்து படம் வெளியிட்டது பற்றி சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை நடத்தியதில் சுரேஷ்தான் குற்றவாளி என்பது தெரியவந்ததால் அவரை கைது செய்துள்ளனர்.

தனிப்படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஏர்செல் நிறுவன மொபைல் எண் மூலமே ஆபாச படம் பரப்பப்பட்டுள்ளதை கண்டு பிடித்தனர். பின்னர் இது தொடர்பான 6 பக்க ஐ.பி. எண்களை பெற்று முதன் முதலில் இந்த ஆபாச படங்களை பரப்பியவர் யார்? என்று கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.

அப்போது இளம்பிள்ளை அருகே உள்ள கல்பாரப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (22) என்பவர் அந்த பேஸ்-புக் ஐ.டி.க்கு அதிக படங்களை அனுப்பியது தெரிய வந்தது. இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் சுரேசை பிடித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.  அங்கு வைத்து விடிய விடிய தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், வினுப்பிரியாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட் டதை ஒப்புக்கொண்ட அவர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களையும் போலீசாரிடம் தெரிவித்தார். 

’’நானும், வினுப்பிரியாவும் காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினுப்பிரி யாவுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நான் எவ்வளவோ? எடுத்துக்கூறியும் என்னை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.  இதனால் அவரது வீட்டிற்கு சென்றும் நான் பெண் கேட்டேன், அப்போது அவரது பெற்றோர் சமதானப்படுத்தி என்னை அனுப்பி வைத்து விட்டனர்.  ஆனாலும் காதலி நமக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ? என்ற ஆத்திரம் எனக்கு ஏற்பட்டது. இதனால் அவரை பழி வாங்க திட்டமிட்டேன். அதன்படி வினுப்பிரியாவின் படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டேன். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதால் வீட்டிலேயே முடங்கி இருந்தேன். ஆனாலும் போலீசார் விசாரித்து கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

ad

ad