புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2016

பேஸ்புக் நண்பர் தான் சுவாதி கொலையாளி?- கொலையாளியை நெருங்கிவிட்டோம்!- பொலிஸார்

சுவாதியுடன் பேஸ்புக்கில் தொடர்புள்ள இரண்டு பேரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும்,
கொலையாளியை நெருங்கி விட்டோம் என்றும் காவல்துறையினர் தொிவித்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் வைத்து மர்மநபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ரயில்வே பொலிஸாருடன் இணைந்து சென்னை மாநகர பொலிஸாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கொலையாளியை கண்டு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் வழக்கு விசாரணை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சுவாதியைக் கொன்ற கொலையாளி யார்? என்பது பற்றி 5 நாட்களாகியும் எந்தவிதமான துப்பும் துலங்காமலேயே உள்ளது.
கமரா காட்சிகளும், கொலையாளி வீசிவிட்டுச் சென்ற அரிவாளில் பதிவாகி இருந்த கைரேகைகளும், பொலிஸுக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.
சுவாதியின் செல்போன் எண்ணை வைத்தும் துப்பு துலக்கப்பட்டது. அவர் யார் யாருடன் பேசி இருக்கிறார் என்பது பற்றிய விவரங்களை பொலிஸார் சேகரித்தனர்.
இதன் மூலமாக 100-க்கும் மேற்பட்ட செல்போன் எண்களைக் கண்டுபிடித்த பொலிஸார் சுவாதியிடம் போனில் பேசிய அனைவரிடமும் விசாரித்தனர். ஆனால் எந்தவிதத் துப்பும் துலங்கவில்லை.
சுவாதியின் செல்போனில் முக்கியமான ஆதாரங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், கொலையாளி எடுத்துச் சென்ற செல்போன் இதுவரை கிடைக்காததால் சுவாதியின் பேஸ்புக் கணக்கை ஆய்வு செய்தனர்.
அப்போது அவருடன் நண்பர்கள் 2 பேர் தொடர்ந்து பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் பிடித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் கமராவில் பதிவாகி இருக்கும் வாலிபர் போன்ற தோற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்தான் சுவாதியைக் கொன்ற கொலையாளியாக இருக்கலாமோ என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், சுவாதி கொலையில் விரைவில் துப்பு துலங்கும் என்றும் கொலையாளியை நெருங்கி விட்டோம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ad

ad