புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2016

சுவாதி கொலை தொடர்பான தகவல் தெரிவிக்க பிரத்யேக செல்பேசி எண்கள்: மாநகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுவாதி கொலை வழக்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுவாதியின் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு சென்றுள்ள போலீசார், அங்குள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

சுவாதி கொலையை நேரில் கண்டவர்களோ அல்லது கொலையாளி குறித்து தகவல் தெரிந்தாலோ உடனே காவல்துறைக்கு தெரிவித்து உதவ வேண்டும். தகவல் தெரிவிக்க பிரத்யேக செல்பேசி எண்கள் உள்ளன என்றார்.

அதன்படி கூடுதல் ஆணையர் சங்கரை 89 399 66 985 என்ற எண்ணிலும், இணை ஆணையர் மனோகரனை 98 409 62 359 என்ற எண்ணிலும், துணை ஆணையர் பெருமாளை 94 434 81 933 என்ற எண்ணிலும், உதவி ஆணையர் தேவராஜனை 98 401 90 505 என்ற எண்ணிலும், உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியை 98 840 70 878 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 

ad

ad