சாவகச்சேரி – நாவக்குளி பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர் பலியானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் நாவக்குளி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவரே மரணமடைந்துள்ளார்.
இதேவேளை தகாத உறவே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேகநபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சாவகச்சேரி பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.